தமது கோரிக்கைகளுக்கு எதிர்வரும் திங்கள் கிழமைக்கு(09) முன்னர் உரிய பதில் கிடைக்காவிட்டால் தற்போது கண்டி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை மத்திய மாகாணத்தை உள்ளடக்கியவாறு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் இன்று(07) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.