ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் 32 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி இவர்களை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவத்தின் போது, பௌத்த பிக்கு மற்றும் பிரதேச மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டி, வீரவில பிரதேசத்தில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியை மறித்து வீரவில சந்தியில் இருந்து அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தெரிவிக்கப்படுகின்றது.