இன்று(10) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரினை ரூ.5 இனால் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தெரிவித்துள்ளது.
தற்போது லீட்டர் ஒன்றின் விலை ரூ.49/- ஆக இருக்கும் மண்ணெண்ணெய் விலை ரூ.44/- ஆக குறையவுள்ளது.
2017 வரவு செலவுத் திட்டத்தில் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை ரூ.5 இனால் குறைக்கப்படும் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.