இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 26 பேர் இன்றைய தினம் காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலை வடமராட்சி கடற்பகுதிக்குள் 3 படகுகளில் அத்துமீறி நுழைந்த மீனவர்கள் தொடர்பாக வடமராட்சி மீனவர்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் கடற்படையின் கரையோர ரோந்துப்படை குறித்த மீனவர்களை கைது செய்துள்ளது.
கைதான மீனவர்கள் இன்று காலை 9 மணியளவில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த 26 மீனவர்களும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.