நீர் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தொழிலாளர் சங்கம்…

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பத்தலே, தெற்கு இவுர இரண்டாவது கட்ட வேலைத்திட்டத்தை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தனியாருக்கு அந்த திட்டம் வழங்கப்படுவதன் ஊடாக, நீரை அந்த பிரிவிடமிருந்து மீண்டும் விலைக்கு வாங்கும் நிலை இடம்பெறும் என்று அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் உபாலி ரத்ணாயக்க கூறினார்.

இதன் காரணமாக நீர் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.