திருகோணமலை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியாவுடன் கலந்துரையாடல் ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறுகின்ற உலக பொருளாதார மாநட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதரமர், இந்தியாவின் NDTV இற்கு வழங்கியுள்ள செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது திருகோணமலையின் திட்டமிடல் நடவடிக்கைகள் சிங்கப்பூரினால் மேற்கொள்ளப்படுவதாகவும், அது நிறைவடைந்தவுடன் அந்தப் பிரதேசம் பாரிய சுற்றுலா வலயமாக மாறும் என்றும், அதன் பின்னர் ஜப்பான் முதலீடு செய்யும் என்றும் பிரதமர் இந்த உரையாடலின் போது கூறியுள்ளார்.
வடமாகாணத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக கூறியுள்ளார்.
இது தவிர இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் உத்தேசிக்கப்பட்டுள்ள எட்கா உடன்படிக்கைக்கு இந்த ஆண்டின் நடுப்பகுதியளவில் ஒப்பமிடுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.