பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்ற நீதிவான் நீதிபதியும் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதியுமான எம்.முஹைதீன் முன்னிலையில் இன்று(23) ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவைப் பிறப்பித்தார்.