மாலபே தனியார் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை…

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகத்தை முழுவதும் மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்து வந்த சிலரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

சைட்டம் நிறுவனத்தின் முன் நடந்த இந்த சம்பவத்தால், சமீர சேனாரத்னவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளதோடு, குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவிக்கின்றது.