முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு…

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று(07) ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்தே விமல் வீரவன்சவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அரச வாகனங்களை முறையின்றி பயன்படுத்திய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு விமல் வீரவன்ச உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.