ரவி கருணாநாயக்கவின் கையிலிருந்து நழுவிய நிதி அமைச்சு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த வாரம் மேற்கொள்ளவிருந்த அமைச்சரவையில் மாற்றம் தற்போது மார்ச் மதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

அந்த வகையில், மார்ச் இடம்பெற உள்ள அமைச்சரவை மாற்றத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவிற்கு துறைமுகங்கள் அமைச்சு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நிதி அமைச்சு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டமையால், அதனை மாற்றி கலாநிதி சரத் அமுனுகமவை நிதியமைச்சராக நியமிக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

அத்துடன் வெளிநாட்டு நிதித்துறையில் புகழ்பெற்ற இரான் விக்கிரம ரட்ணவை பிரதி நிதி அமைச்சராக நியமிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நீதி அமைச்சராக லக்ஷமன் கிரியெல்ல மாற்றப்படுவார் என்றும், அந்த அமைச்சுக்களின் இருக்கும் விஜயதாச ராஜபக்ஸ மற்றும் சந்திமாவீரக்கொடி, அர்ஜுன ரணதுங்க ஆகியோரின் அமைச்சு பதவிகளில் மாற்றத்தை கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.