இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசரைத் தெரிவு செய்யும் பொருட்டு, அரசியலமைப்புச் சபைக்கு பெயர் முன்மொழியும் நடவடிக்கைகள் இன்று(27) மேற்கொள்ளப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் பெயர்களை முன்மொழியவுள்ளார்.
தற்போது பிரதம நீதியரசராக உள்ள கே.ஶ்ரீபவன் நாளை(28) முதல் ஓய்வு பெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.