நடிகர் தனுஷ் பவர் பாண்டி படத்தில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். ஆனால் இன்னொரு பக்கம் அவர் தாய் தந்தை நாங்கள் தான் என்று கதிரேசன், மீனாட்சி தம்பதி வழக்கு போட்டிருந்தனர்.
இவர்களின் வழக்கிற்கு தனுஷும் பதில் மனுக்கள் எல்லாம் சமர்ப்பித்தார். ஆனால் இறுதியில் தனுஷின் அங்க அடையாளங்களை பார்க்க வேண்டும், எனவே தனுஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று காலை தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராகியுள்ளார். தற்போது நீதிபதி இந்த வழக்கை மார்ச் 2ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.