வட மேல் மாகாண ஆளுனருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. வட மேல் மாகாண ஆளுனராக கடமையாற்றி வருகின்ற அமரா பியசீலி ரத்நாயக்க மீது இன்று(07) நடைபெறவுள்ள மாகாணசபை கூட்டத்தின் போது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களினால் குறித்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மாகாண ஆளுனர் பியசீலி ரத்நாயக்க, வேண்டுமேன்றே அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.