கொழும்பு ராஜகீய வித்தியாலய கிரிக்கெட் போட்டி தொடர்பாக இடம்பெறும் பேரணி காரணமாக, கடும் வாகன நெரிசல் ஏற்படலாம் என்பதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.
பாடசாலை முன் ஆரம்பமாகியுள்ள குறித்த பேரணி, அர்னல்ட் சில்வா மாவத்தை, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, லிப்டன் சுற்று வட்டம், ஆர்.ஏ.டி.சில்வா மாவத்தை, டுப்ளிகேன் சந்தி, தும்முல்லை சுற்றுவட்டம், குமாரதுங்க முனிதாஸ மாவத்தை ஊடாக பயணிக்கவுள்ளது.