சட்டத்தை மீறிய முன்னாள் நீதி அமைச்சர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையும் அமைச்சருமான அப்து ரவூப் ஹக்கீமும் அவருடைய அரசியல் முக்கியஸ்தர்களும் பயணித்த வாக தொடரணியாது அம்பாறை மாவட்ட சம்மாந்துறை நகரினை நோக்கி பயணத்தினை மேற்கொண்டிருந்தது.


அப்பொழுது சம்மாந்துறை செல்லும் வழியான காரைதீவு முழு வட்ட வளைவு சந்தியில் வீதி போக்குவரத்து விதி முறைகளை முற்றாக மீறி வளைவு சந்தியில் அமைச்சருடைய வாகனமும் அதற்கு பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் பயணித்த முறைமையானது உண்மையில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டமும் ஏழைகளுக்கும், பாமரமக்களுக்கும் ஒரு சட்டமா என்ற கேள்வியினை பகிரங்கமாக இந்த நாட்டினுடைய நிருவாக, நீதி துறைகளை பார்த்து கேட்கின்றது என நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் பொறியலாளர் அல்ஹாஜ் நாபீர் தெரிவிக்கின்றார்.


அது மட்டுமல்லாமல் தற்பொழுது இந்த நாட்டில் உள்ள அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியில் இருக்கும் முஸ்லிம் காங்கிரசின் தலைமையானது கடந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராகவும் கடமையாற்றியவராவார்.


அந்த வகையிலே இவ்வாறு பல வாகனங்களுடன் பயணிக்கின்ற பொழுது முற்று முழுதாக போக்குவரத்து விதி முறைகளை மீறி இந்த நாட்டினுடைய சட்ட ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எவ்வாறு சட்டம் ஒழுங்கு பக்கசார்பின்றி பேனப்படுகின்றது என தேசியம் மற்றும் சர்வதேசத்தின் விமர்சனங்களுக்கு உள்ளாகும் வகையில் அமைச்சரும் அவருடைய அரசியல் முக்கியஸ்தர்களும் நடந்து கொண்டமையானது எல்லோரும் சிந்திக்க வேண்டிய விடயம் என நாபீர் பெளண்டேசன் தெரிவிக்கின்றது.


அத்தோடு இன்றைய தினம் (04.03.2017) நன்பகல் 01.30 மணியளவில், வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு தீர்வினை எவராவது பெற்றுதருவார்கள் என குறித்த சந்திக்கு அருகாமையில் காத்திருந்த வேளையில் எமது சத்தியாக்கிரக போராட்டத்தை சிறிதும் பொருட்படுத்தாமல், குறித்த போராட்டம் இடம்பெற்ற இடத்தின் முன்பாக உள்ள விபுலானந்த சதுக்க கட்டாய சுற்றுவட்டப்பாதை ஒழுங்கு விதியை மீறியும், பாதசாரி கடவையை மீறியும் போக்குவரத்து பொலிசார் கடமையில் இருந்தவேளை அனைத்து வாகனங்களும் முந்தி சென்றன.