சீனிக்காக விதிக்கப்பட்டி ருந்த ஆகக்கூடிய சில்லறை விலையை நீக்குவதற்கு, இந்தியாவில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என, இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்றுமதிக்காக 25 சதவீதம் சரி விதிக்கப்பட்டமை காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாக, இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
வௌ்ளை சீனி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றுக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரசாங்கம், நேற்று அறிவித்தது.
அதற்கமைய, சீனி ஒரு கிலோகிராம் 93 ரூபாய் மற்றும் கோழியிறச்சி ஒரு கிலோகிராம் 410 ரூபாய், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 490 ரூபாய் என்றிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.