கடத்தப்பட்ட Aris 13 கப்பல் குறித்து கடற்படை அதிரடி… விடுவிக்க வேண்டுமாயின் கப்பம் கோரப்படுகின்றது…

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலானது இலங்கைக்கு சொந்தமான கப்பல் அல்ல எனவும் அதில் பணியாற்றும் பணியாளர்கள் 8 பேரும் இலங்கையர்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேசியக் கொடியுடன் சென்று கொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பலான Aris 13 என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே இலங்கை கடற்படை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த கப்பலை விடுவிக்க வேண்டுமாயின் கடற்கொள்ளையர்களால் கப்பம் கோரப்படுவதாகவும் சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

(rizmira)