சவூதி’யில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு…

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை நாட்டில் இருந்து வெளியேற மூன்று மாத பொது மன்னிப்பு காலத்தை வழங்க பிரதிப் பிரதமர் மொஹமட் பின் நயிப் தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் திகதியில் இருந்து 90 நாட்களுக்கு இந்த பொது மன்னிப்பு காலம் அமுலில் இருக்கும்.

இந்த கால பகுதிக்குள் சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தமது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)