இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருபோதும் இணைந்து கொள்ளப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று(21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன் நிலைமாறு கால நீதிவழங்கல் செயற்பாட்டுக்காக கலப்பு நீதிமன்றத்தை நியமிக்கவும் ஒருபோதும் இணங்கவில்லை என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.