கொழும்பு நகரில் காணப்படும் வாகன நெரிசலை குறைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் பேருந்துகளுக்கான தனி ஒழுங்கை அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை(23) முதல் தற்காலிகமாக இடை நிறுத்தப்படவுள்ளதாக மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி குறித்த இத்திட்டம் ராஜகிரியவில் இருந்து ஆயுர்வேத சந்தி வரை அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று(22) கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், எதிர்வரும் 3 மாதங்களினுள் விரிவான திட்டமாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.