இலங்கை கடற்பரப்பில் வெவ்வேறு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 16 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனலை தீவு கடற்பரப்பில் வைத்து 8 இந்திய மீனவர்களையும் மேலும் 8 இந்திய மீனவர்களை மன்னார் கடற்பரப்பில் வைத்தும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.