ரூபாவின் பெறுமதியை நிர்வகிப்பது மத்திய வங்கி அல்ல – இந்திரஜித் குமாரசுவாமி

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியை நிர்வகிப்பது மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியினால் அது நிர்வகிக்கப்படுமானால் அந்நியச் செலாவணி வீணாக செலவிடப்படும் என்று நேற்று(24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கூறியுள்ளார்.

இதுதவிர செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைவது, நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி ஏற்படுவதற்கு காரணமாக அமையும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

(rizmira)