மட்டக்களப்பு,காத்தான்குடி நகர சபை பகுதியில் டெங்கு நோய் அதிகரிப்பினால் சமய பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களை இன்று(30) முதல் ஒரு வாரம் மூடுமாறு சுகாதார பிரிவு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி முன்பள்ளிகள் 40 மற்றும் 35 சமய(குர்ஆன்) பாடசாலைகளும், தனியார் கல்வி நிலையங்கள் 15 உம் இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளன.
காத்தான்குடியில் இரண்டு நாட்களுக்குள் 190 டெங்கு நோயாளர்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதில் 6 குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.