வௌிநாட்டுக் கடன்கள் சம்பந்தமான அறிக்கை எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றில்..

தற்போதைய அரசாங்கம் இதுவரையில் பெற்றுக் கொண்டிருக்கும் வௌிநாட்டுக் கடன்கள் சம்பந்தமான அறிக்கை எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வௌிநாட்டுக் கடன்களில் அதிகளவானவை கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்கெ என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அது தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய அறிக்கையை மே மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதாக நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

(rizmira)