இலங்கை உயர்ஸ்தானிகரின் கோரிக்கை மலேசிய மேல் நீதிமன்றினால் நிராகரிப்பு..

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாரின் கோரிக்கையை மலேசியாவின் மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து அவர் தாக்கப்பட்டார்.

இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 3 பேர் குறித்த வழக்கு, சேபாங் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த வழக்கு விசாரணையை பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி கோலாலம்பூர் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு அவர் கோரி இருந்தார்.

எனினும் இதனை நீதிமன்றம் மறுத்துள்ளது.

(rizmira)