கொலன்னாவை, மீதொட்டமுல்லயிலிருந்து, வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு, மாதாந்தக் கொடுப்பனவாக 50,000 ரூபாயை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(21) மற்றுமொரு கூட்டம் நடைபெறவுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்று முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.