கீதா குமாரசிங்கவின் மேன்முறையீட்டு மனு இன்று மீளவும் விசாரணைக்கு..

காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனு தொடர்பான விசாரணை இன்று(15) மீளவும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு கடந்த 12 ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. குறித்த இந்த உத்தரவு இன்று வரை அமுலாகும் எனவும் கூறப்படுகின்றது.

(rizmira)