அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக நுகர்வோர் சேவைகள் அதிகார சபை தகவல் தெரிவிக்கையில் அதிக விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் நுகர்வோரும் நம்முடன் கைகோர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)