இராணுவத்தினரை கௌரவப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் நாடாளுமன்ற மைதானத்தில் இன்று(19) இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்வில், முப்படைத் தளபதிகளும் காவல்துறைமா அதிபர் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த இராணுவத்தினரின் உறவினர்கள் மற்றும் பலர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்வுக்காக நாடாளுமன்ற வளாகத்தில் விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.