2017 IPL கிண்ணத்தினை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியதைத் தொடர்ந்து அவ்வணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க புதிய சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.
அதாவது, அதிக தடைவைகள் ஐபிஎல் போட்டியில் மும்பை அணி சார்பில் விளையாடியமையே ஆகும்.
மும்பை இந்தியன்ஸ் அணியானது மூன்றாவது தடவையாக ஐபிஎல் கிண்ணத்தினை சுவீகரித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில் கிண்ணத்தினை சுவீகரித்திருந்தது. குறித்த மூன்று சந்தர்ப்பங்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மாலிங்க விளையாடியிருந்தார்.