வேயங்கொடை மற்றும் கம்பஹா புகையிரத நிறுத்தங்களுக்கு இடையில் இன்று(23) காலை புகையிரதமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதால் பிரதான புகையிரத மார்க்கத்தில் புகையிரதங்களில் தாமதம் நிலவுவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த நிலைமையினை வழமைக்கு கொண்டுவர உரிய வேலைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.