பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 31ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இன்று(24) குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஞானசார தேரர் சமூகமளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்தை அவமதித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.