நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தற்போது கடும் வாக நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கொழும்பினை அண்டிய பல வீதிகள் நீரினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்தோடு வாகனங்களை செலுத்துமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.