அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்கி உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று(26) நடைபெற்ற கூட்டமொன்றிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நிதி ஒதுக்கீடுகளை செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
எவ்வித தடையும் இன்றி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்க நிதியை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.