மாத்தறை நகரத்தை அண்மித்து இருக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரிக்கை..

நில்வலா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மாத்தறை நகரத்தை அண்மித்து இருக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பண்டத்தர, வெலேவத்தை, மெத்தவத்தை, உயன்வத்தை மற்றும் நாதுகல ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் லுதினல் கேர்ணல் பிரியங்கர உதேஷ் குணவர்தன மேலும் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)