உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக மிலிந்த மொரகொட உள்ளிட்ட ஐவர் தாக்கல் செய்த வழக்கினை எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதி விசாரைணக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(01) உத்தரவிட்டுள்ளது.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியை இயக்கியமைக்கு எதிராக பிரதேசவாசிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் இவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.