இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் 3வது போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியை இன்று(03) எதிர் கொள்கிறது.
குறித்த, இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
உபாதை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இன்றைய போட்டியில் விளையாடுவது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தென்னாபிரிக்க அணி சார்பில் ககிஸ்கோ ராபாடா அதிக விக்கெட்களை சாய்க்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.