இலங்கை அணியின் தற்போதைய தலைவர் உபுல் தரங்கவிற்கு சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் எதிர்வரும் 2 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்(03) தென்னாப்பிரிக்க அணியுடன் இடம்பெற்ற போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த போட்டியின் போது இலங்கை அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு 4 மணித்தியாலங்கள் எடுத்துள்ளமை இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் காயமடைந்துள்ளமையின் காரணமாக உப்புல் தரங்க தலைவராக செயற்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.