நாட்டின் பல பாகங்களில் இன்றும்(05) கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று மாலை மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறித்த நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.