நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 25,000 பேர் வரை தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களிலேயே தங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்கமைய, 226 நலன்புரி நிலையங்களில் 7,046 குடும்பங்களைச் சேர்ந்த 24,962 பேர் தங்கியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 214 பேர் உயிரிழந்தததோடு 79 பேர் வரை காணமல் போயிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.