அனர்த்த நிவாரணம் குறித்த மஹிந்தவின் கோரிக்கைக்கு இன்று தீர்மானம் – கூட்டு எதிர்க்கட்சி..

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவின் கோரிக்கை குறித்து கூட்டு எதிர்க்கட்சி இன்று(06) தீர்மானிக்க உள்ளது.

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜூன் மாதச் சம்பளத்தை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கணக்கில் வரவு வைக்குமாறு மஹிந்த அமரவீர கட்சியின் உறுப்பினர்களிடம் கோரியிருந்தார்.

தேசிய அனர்த்தம் ஒன்றின் போது அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டியது அவசியமானது என மஹிந்த அமரவீர தனது கடிதத்தில் மேலும் கோரியுள்ளார்.

(rizmira)