ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன எதிர்வரும் மாதம் பங்காளதேஷிற்கு செல்ல உள்ளார்.
பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு இலங்கை ஜனாதிபதி பங்களாதேஷிற்கு செல்ல உள்ளார்.
ஜூலை மாதம் 13ம் திகதி முதல் 16ம் திகதி வரையில் நான்கு நாட்கள் ஜனாதிபதி மைத்திரி பங்களாதேஷில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்த பயணத்தின் போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.