தபால் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்…

தபால் தொழிற்சங்கங்கள் இன்று(12) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் சுற்றுலா ஹோட்டலை நடத்த தீர்மானித்தமை மற்றும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படாமை போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இது குறித்து உரிய தீர்வொன்று கிடைக்காதவிடத்து எதிர்வரும் 26ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் குறித்த சங்கம் அரசுக்கு எச்சரித்துள்ளது.

 

(rizmira)