வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து இனவாதத்தை கட்டவிழ்த்து விடுகின்றவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினால் இன்று(13) குறித்த இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அண்மையில் வெளியிட்ட கருத்தொன்றையும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் மேலும் தெரிவித்தார்.