கலபொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை…

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானாசார தேரருக்கு எதிராக இன்று(15) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித அல்-குர்ஆனை அவமதித்தல் மற்றும் வட்டரக்க விஜித தேரரின் ஊடக சந்திப்பில் குழப்பம் எற்படுத்தியமை தொடர்பான வழக்கு இன்று(15) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த வழக்கில் ஞானாசார தேரர் ஆஜராகியிருக்கவில்லை, அடுத்த வழக்கிற்கு ஞானாசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடபட்டது

(rizmira)