இலங்கை மத்திய வங்கி நேற்று(21) வெளியிட்டுள்ள நாணயப் பரிமாற்றம் தொடர்பான அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி முதன் முறையாக 155 ரூபாவைத் தாண்டி வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது.
வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு மற்றும் விற்பனை பட்டியலில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 155.01 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 151.21 ரூபாவாக பதிவாகி இருந்தது.
இதன்மூலம் இலங்கை நாணயப்பெறுமதி மோசமான நிலமைகளை எட்டி வருவதாகவும் பொருளாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.