அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேர் கைது..

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் கடற் பகுதியில் 16 கடல் மைல் தொலைவில் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த போதே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது இந்திய மீனவர்களின் இரண்டு படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள் சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)