மாணவி வித்தியாவின் பாலியல் படுகொலை வழக்கின் தொடர் வழக்கு தமிழ் மொழி பேசும் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் முறையில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த இந்த வழக்கு தொடர்பாக இன்று(28) முதல் எதிர்வரும் ஆறு நாட்களுக்கு தொடர் விசாரணைகள் இடம்பெறவுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் ஆகியோரின் தலைமையில் குறித்த இந்த தொடர் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.