எதிர்ப்புப் போராட்டத்திற்கு தடை கோரிய மனு நீதிமன்றினால் நிராகரிப்பு..

மருத்துவ பீட மாணவர்களது செயற்திட்ட குழுவின் மாணவர்களது பெற்றோர்களால் இன்று(28) விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் இடம்பெறவுள்ள சத்தியாக்கிரக மற்றும் எதிர்ப்புப் போராட்டத்திற்கு தடையுத்தரவை பிறப்பிக்குமாறு குருந்துவத்தை பொலிசார் முன்வைத்த கோரிக்கையினை கொழும்பு நீதிமன்றம் இன்று(28) நிராகரித்துள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் போராட்டக்காரர்கள் நடந்துகொள்ளும் பட்சத்தில் பொலிஸ் அதிகாரத்தினை பயன்படுத்துமாறும் காவற்துறையினருக்கு நீதிமன்றம் மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

(rizmira)