இந்தியா’வினை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி…

சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நோர்த் சவுண்ட்’இல் நேற்று(02) இடம்பெற்ற குறித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த இந்திய அணி 49.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

ஏற்கனவே இடம்பெற்ற 3 போட்டிகளில் 2 இல் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இதன்படி, ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்திய அணி 2:1 என்ற ரீதியில் முன்னிலையில் உள்ளது.

 

(rizmira)